தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி மாதத்தில் மட்டும் பொருட்களை கடத்திய 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.