விஷ்வ இந்து பரிஷத்தின் தென் தமிழக தலைவர் பொறுப்பை V. கதிர்வேல் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பசுமை வழி சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று இரவு இபிஎஸ்-ஐ சந்தித்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு வழக்கறிஞர் பிரிவில் மிக முக்கிய பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து இன்று பலர் அதிமுகவில் இணைவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.