தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பாசன உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தொகுக்கப்பட்ட குடிநீரான ஹில்லி அக்வா நீரை ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கூடிய விரைவில் கையலுக்காக உள்ள நிலையில் தனியார் நிறுவன தண்ணீர் பாட்டில்களை காட்டிலும் பொதுமக்கள் குறைந்த விலையில் இதனை வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.