தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணி முடிந்ததும் டிசம்பர் 22ஆம் தேதி முதல் உணவுப் பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் அதுவரை ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கும் பணி நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.