தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம் நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.