தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு எதிரொலியாக நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குமரியில் இன்று கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்பதால் அங்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.