தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.