வைகை அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.