கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கேரளாவில் 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் மஞ்சள் குடும்ப அட்டை பயன்படுத்தும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஓணம் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் வெள்ளையட்டை பயன்படுத்தும் ரேஷன் அட்டைதாரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த வருடம் ஓணம் பரிசு தொகுப்பாக 13 பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  அதாவது, அரிசி, சர்க்கரை, சீனி, ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களை தவிர்த்து தேயிலை தூள், சிறு பருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரிப்பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, துவரம் பருப்பு மற்றும் உப்பு ஆகிய 13 பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிசுத்த வகுப்பு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் வருகின்ற ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.