உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரருக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையில் முதல் சிலிண்டர், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இரண்டாவது சிலிண்டரும், டிசம்பர் மாதம் மூன்றாவது சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டரை பெறுவதற்கு உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும். பிறகு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

அந்தந்த காலத்தில் சிலிண்டரை பெறாவிட்டால் அவர்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டு விடும். இதில் பயன் பெறுவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டுடன் சிலிண்டரை இணைக்க வேண்டும் இல்லை என்றால் இலவச செல்கின்றது தற்போது அந்த மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் காஸ் சிலிண்டரை இணைத்துள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.