ராஜஸ்தான் மாநிலம் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் காலி பணியிடங்கள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது சுகாதாரத் துறையில் 18,112 காலி பணியிடங்கள் உள்ளது. இவற்றில் செவிலியர் பணியிடங்கள் 7860 உள்ளது. மகளிர் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் 3736 ஆக அதிகரித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தற்போது 7860 செவிலியர் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://rajswasthya.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.