தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் எனவும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தொடர்ந்து பத்து நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.