தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது