இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சிலிண்டர் விலைக்கு தகுந்த போல பொதுமக்கள் மத்திய அரசு சார்பாக மானியமும் பெற்று வருகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசே சிலிண்டர் மானியத்தை 300 ரூபாயாக உயர்த்திய நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரை மானியத்துடன் சேர்த்து 600 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் நடப்பு ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வணங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெற விரும்பினால்  www.pmuy.gov.in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.