முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.