தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திர மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்.

பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது. தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறேன் என திருச்சியில் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.