தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மூலிகை பெட்ரோலை பயன்படுத்த ஆகஸ்ட்

15ம் தேதிக்குள் அரசு அனுமதிக்க வேண்டும் என்று ராமர் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். தான் கண்டுபிடித்த எரி பொருளை வாகனங்க ளுக்கு பயன்படுத்தினால் புகை வராது.

இந்த மூலிகை பெட்ரோலை வெறும் ரூ.15க்கு (ஒரு லிட்டர்) வழங்குவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். மூலிகைப் பெட்ரோலை பயன்படுத்த அனுமதிக்கும் வரை தண்ணீர் அருந்தாமல், சாப்பிடாமல் இருப்பேன் என தெரிவித்தார்.எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன் நிரூபித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.