மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து போயினர். திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. இதனையடுத்து  முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்த உடனே மக்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. ரூ.1000 கொடுத்து மக்களிடம் வாக்கு வாங்கி விடலாம் என திமுக நினைக்கிறது. ஒருபோதும் நடக்காது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கல்வி கடன் ரத்து, பழைய ஓய்வூதியம், மாதம் ஒருமுறை மின்கட்டண வாக்குறுதிகள் என்னவானது என கேள்வி எழுப்பிய அவர், ஆவின் நெய் விலை உயர்வால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்