மஞ்சப்பை விருதுக்கு தகுதியுடைய பள்ளி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நெகிழி பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமான மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் மூன்று சிறந்த பள்ளிகள், மூன்று சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதற்கான விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மஞ்சப்பை விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக 10 லட்சமும், இரண்டாம் பரிசாக 5 லட்சமும், மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.