இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் எடுத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணியாளர்க்ளுக்கு மாத ஊதியமாக மொத்தம் 15,235 ரூபாய் வழங்கப்படும்.  இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன், மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு உள்ளிட்டவை நடைபெறும்.