பாஜக கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து  விளக்கமளித்துள்ளார். அதாவது, ராமநாதபுரம் தொகுதியானது சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த காலத்தின் வரலாறு.

எனவே நீதி வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்பதால் அங்கு நான் போட்டியிடுகிறேன் என்றும், நீதிக்குப் புறம்பாக செயபடுபவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.