தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி. ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு பூங்கொத்து கொடுத்து ஆளுநர் ரவி வாழ்த்து கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் மீண்டும் அமைச்சர் பதவி தரப்பட்டது. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கெடு விதித்திருந்தது. பொன்முடிக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.