விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகினார். அதன்பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸில் இருந்து அவர் வெளியே வந்ததற்கு காரணம் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால்தான் என கூறப்பட்டது.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.