தமிழ் திரையுலகின் பிரபலமான நடன கலைஞராகவும், நடிகராகவும் வலம் வருபவர்தான் ராகவா லாரன்ஸ். இவர் இப்போது சந்திரமுகி 2-ல் நடித்து வருகிறார். இந்த படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதையடுத்து இவர் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரன் படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தொடக்கத்தில் ராகவா நடிகர் சூப்பர் சுப்பராயனின் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் நடனத்தில் ஆர்வம் கொண்டதால் பணி முடிந்ததும் நடன பயிற்சியில் ஈடுபடுவாராம். இதனை பார்த்த பட இயக்குனர் ஒருவர் ராகவா லாரன்ஸ் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளார். அதன்பின் ராகவா ரஜினி முன் நடனம் ஆடி காட்டினாராம். அப்போது அவரது டான்ஸ் பிடித்துபோய் நடன சங்கத்தில் சேர்த்துள்ளாராம். இதற்குரிய மொத்த செலவையும் ரஜினியே பார்த்து கொண்டாராம். அதன்பிறகே ராகவாலாரன்ஸ் பெரிய ஹீரோவாக மாறினார்.