மதுரையில் பிரபலமான ரவுடியாக இருந்தவர் வரிச்சூர் செல்வம். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என போலீஸ் ஸ்டேஷனில் இல்லாத வழக்குகளே கிடையாது. ஒரு கட்டத்தில் இவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ள முடிவு செய்துவிட்ட நிலையில் அதன் பிறகு தான் திருந்தி வாழ விரும்புவதாக வரிச்சூர் செல்வம் கூறியதை அடுத்து தற்போது ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார். இவர் அடிக்கடி youtube இல் கொடுக்கும் பேட்டிகள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் ஒரு youtube சேனலுக்கு வரிச்சூர் செல்வம் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, எம்ஜிஆருக்கு தொப்பி, கருணாநிதிக்கு கண்ணாடி போன்று தற்போது வரிச்சூர் செல்வத்திற்கு  நகை என்று ஆகிவிட்டது. சிறுவயதிலிருந்து நகை போட்டு பழகி விட்டதால் என்னால் தற்போது நகை போடாமல் இருக்க முடியவில்லை. நான் அணிந்திருக்கும் நகைகளுக்கும் முறையாக வரி செலுத்துகிறேன்.

நான் சுமார் 200 கிலோ வரை நகைகளை அணிந்துள்ளேன். வாரத்தில் 2 நாள் விமானத்தில் செல்வேன். நான் இந்தியாவில் செல்லாத இடங்களே கிடையாது. நான் ரஜினி, விஜய் போன்ற பல நடிகர்களை விமானத்தில் செல்லும்போது பார்த்திருக்கிறேன். ஆனால் அஜித்தை மட்டும் சந்தித்தது கிடையாது. என்னை தற்போது ஒரு ஜோக்கர் போன்று ஆகிவிட்டனர். பலர் என்னுடன் சேர்ந்து ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள். மதுரையில் நான் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காயத்ரி ரகுராம் என்னை எதார்த்தமாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் அதை திருச்சி சூர்யா சிவா தவறான முறையில் பதிவிட்டு விட்டார். இது குறித்து நான் அவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது அதையும் சர்ச்சையாகிவிட்டார். என்னை தற்போது விஐபி லிஸ்டில் வைத்திருக்கிறார்கள். மேலும் எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை எனவும் மக்கள் தற்போது என்னை ஒரு ஜோக்கர் போன்று பார்க்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.