தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவின்படி உபரி ஆசிரியர்கள் பணி மாறுதல் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் மாதத்தில் உபரி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.