உத்தரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்த ஒருவரை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இதுபோன்ற தவறான நடத்தைக்கு சகிப்புத்தன்மை இல்லாததே காரணம்” மேலும் அந்த டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததற்காக பயணியின் மப்ளரை வலுக்கட்டாயமாக இழுத்தும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரை எழுந்திருக்க சொல்லி கன்னத்தில் அரைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை எழுப்பிவருகின்றனர்.