இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக 360 என்ற புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் டெபாசிட் செய்த பணத்திற்கான பலனை பெற விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன்பெற முடியும். இதில் வாடிக்கையாளர்களுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை 360 நாட்களுக்கு பின்னர் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு மிகப்பெரிய தொகையாக வழங்கப்படும். பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு நேரடியாக சென்ற இந்த திட்டத்தின் கீழ் இணைந்து நீங்கள் பயன்பெற முடியும். இல்லையென்றால் வங்கியின் நெட் பேங்கிங் தளம் மூலமும் ஆன்லைன் மூலமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை நீங்கள் திறக்கலாம்.