மதுரை அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலில் வந்த 10 பேர் இறந்ததை கேட்டு வருத்தமுற்றேன்.

விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய மதுரை ஆட்சியரை உடனே அறிவுறுத்தினேன். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.