மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மதுரையில் ரயில் தீ விபத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவ இடத்தில அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.