சென்னைக்கு உட்பட்ட நபர்கள் பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களான கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் ஆகிய மூன்று கிராமங்களில் பல்நோக்கு சேவை பணியாளர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த மேற்குறிப்பிட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மாத ஓய்வூதியம் 15,000 வழங்கப்படும் நிலையில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதிகளை உடையவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.