தெற்கு ரயில்வேயில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரத்யேக மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் மருத்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அயனாவரத்தில் புதிய ரயில்வே மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் இதில் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய புகைப்படம், ஆதார் மற்றும் பான் கார்டு, ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றுகளுடன் முகாமை அணுகலாம் எனவும் குடும்ப ஓய்வூதியத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.