பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில  முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது.

அதன்படி படுக்கை, ஏசி பெட்டிகளில் இரவு நேர பயணம் செய்யும்போது பயணிகள் சத்தமாக சக பயணிகளுடனோ அல்லது தொலைப்பேசியிலோ பேச கூடாது. விளக்குகளை இரவு 10 மணிக்கு மேல் எரியவிடக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பயணிகளை டிக்கெட்டை காட்டுமாறு டிக்கெட் பரிசோதகர்(TTE) கூறக்கூடாது. ஆன்லைன் உணவு சேவைகள் இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்படாது. ஆனால் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உங்கள் உணவை முன்கூட்டியே ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.