ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதிக்கும், துணைராணுவ தளபதிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்  500 பேர் அந்நாட்டு துறைமுகத்திற்கு வந்துள்ளனர்.

சூடான் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படை கப்பலில் 500 பேரை சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சவுதி அரேபியா செல்லும் 500 இந்தியர்களையும் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.