தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் காப்பாற்றினார். இந்த சம்பவம் வாரங்கல் ரயில் நிலையத்தில் நேற்று  நடந்திருக்கிறது.

இதுகுறித்த வீடியோவை ரயில்வே பாதுகாப்புப் படை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் இறங்க முயன்றபோது திடீரென்று விழுந்தார். இந்நிலையில் அங்கு நடைமேடையில் நின்றிருந்த ரயில்வே பெண் காவலர் சோனாலி வேகமாக செயல்பட்டு தண்டவாளத்தில் விழாமல் இழுத்து அப்பெண்ணை காப்பாற்றினார்.