தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த பழங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் 9444042322 என்ற whatsapp எண் மூலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மக்கள்  குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் மக்கள் விரும்பும் பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.