யூடியூப் பார்த்துவிட்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி புளியம்பட்டியை சேர்ந்த லோகநாயகி என்ற 27 வயது இளம்பெண் பிரசவத்தை தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்த கணவர் மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். குழந்தைக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

லோகநாயகிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் பிரசவம் நடந்த நிலையில் அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். இருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலை மோசம் அடைந்த நிலையில் தாயும் சிசுவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.