நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று கட்சியில் இருக்கும் பல்வேறு முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று அண்ணாமலை கூறி இருந்தார். இதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியில் இணையை யாரும் வரவில்லை. இதனால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அண்ணாமலை , யாரும் வராமல் இல்லை மிகப் பெரிய தலைகள் இணைய உள்ளனர். அவர்கள் எம்எல்ஏவாக இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏவாக இருக்கலாம். ஆனால் பாஜகவில் இருக்கும் முக்கிய தலைவர்களிடம் அது குறித்து பேசி அனுமதி வாங்க வேண்டும். கட்சியில் இணைவார்கள், எங்கு வைத்து இணைய வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.