சிவகங்கை மாவட்டத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட நிலையில் அப்போது தனக்கு சால்வை அணிவிக்க வந்தவரிடம் அதனை பிடுங்கி தூக்கி வீசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சால்வை அனுபவிக்க வந்தவரின் பேரன் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, நடிகர் சிவகுமாரும் எனது தாத்தாவும் 50 ஆண்டுகால நண்பர்கள். தன் நண்பர் சால்வை அணிவிக்க வருவதை பார்த்த அவர் ஏன்டா இதெல்லாம் பண்ணிக்கிட்டு என அதை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு வாடா போகலாம் என அழைத்துச் சென்றதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.