குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ரோட்டமைன் பி’ என்ற ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்க், கேழ்வரகு, சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளிலும் ரோட்டமைன் பி ரசாயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.