நாட்டில் மழை பெய்யாததற்கு சமீபத்தில் ‘சந்திராயன்-3’ விண்ணில் செலுத்தப்பட்டதே காரணம் என்று  பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இதற்கு பதில் அளிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஆர்டிஐ மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான பதிலை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், கடவுளிடமே பதிலை கேட்டுச் சொல்லுங்கள் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

சரியான நேரத்தில் மழை பெய்யாதது ஏன் என்று கடவுளிடம் கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். சமூக ஆர்வலரின் இந்த இந்த கேள்வியால் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.