கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் போன்ற மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள், கண்டக்டர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ குணம் நவீன கருவிகள் மூலமாக கண் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் முகாமில்  கிட்ட பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், இரத்த அழுத்தம், தூரப்பார்வை மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.