கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் போன்ற மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள், கண்டக்டர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ குணம் நவீன கருவிகள் மூலமாக கண் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் முகாமில் கிட்ட பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், இரத்த அழுத்தம், தூரப்பார்வை மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more