கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த கூத்தூர் பகுதியில் சென்றபோது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி அருகே உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த லோகநாதனின் உறவினர்கள் கோவை வள்ளலூரை சேர்ந்த மணிவண்ணன்(62), அவருடைய மனைவி ஹேமா(60), லோகநாதன் மற்றும் அவருடைய மனைவி அருணா, மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த திருவையாறு அருகே உள்ள புனவாசலை சேர்ந்த தனபால்(55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து திருகாட்டுப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.