தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகை தருவது குறித்து விமர்சித்துள்ள திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை சரி செய்ய 38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் கேட்டார். ஆனால் ஒரு பைசா கூட தரவில்லை. இப்போது தமிழகத்திற்கு வாரம் வாரம் வருகின்ற பிரதமர் மோடி மக்கள் பாதிக்கும்போது வந்து ஏன் ஆறுதல் சொல்லவில்லை? மோடி என்ன செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும் பாஜக வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.