இந்திய வரைபடத்தில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகள், மலைகள், ஆறுகள், ஏரிகள் என சுமார் 30 இடங்களுக்கு சீன அரசு பெயர் மாற்றம் செய்து இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதற்கு மோடியின் பதில் என்ன என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.‌‌

இதுகுறித்து எக்ஸ் பதிவில், அதானிக்கு மின் உற்பத்தி ஒப்பந்தத்தை வாங்கி கொடுக்க இலங்கையிடம் பேச தெரிந்த மோடிக்கு கட்சத்தீவை மீட்க தெரியவில்லையா? 7000 கோடியை கொண்டு போய் இலங்கைக்கு கொட்டி கொடுக்க தெரிந்த மோடிக்கு கட்சத்தீவை மீட்க தெரியவில்லையா? பதில் கூறுங்கள்  மோடி அவர்களே என பதிவிட்டுள்ளார்.