நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பகுதிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இதனை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் இடையூறு இன்றி வந்து செல்ல பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.