நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அடுத்தடுத்து பல கட்சிகளை தங்கள் வசம் இழுப்பதில் முக்கிய கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்து கட்சிகள் உடனான கூட்டணியை பாஜக தமிழகத்தில் உறுதி செய்துள்ளது.

அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி மொத்தமாக பாஜகவுடன் சேர்ந்து கொண்டது. கொங்குநாடு முன்னேற்ற கழகம் மற்றும் பாமக ஆகியவையும் பாஜக உடனான கூட்டணியை அறிவித்துள்ளன. தேர்தல் வருவதற்குள் மேலும் பல கட்சிகள் பாஜகவுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.