ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் பள்ளிகளுக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஊட்டியில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.