நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகின்றது. முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதல் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.