சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவர் மேயர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் இவரை எதிர்த்து யாரும் போடடியிடாததால் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிரியா ராஜன் மேயராகப் பொறுப்பேற்று தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

மிகவும் இளம் வயது மேயர் மற்றும் சென்னையின் முதல் பட்டியலின மேயர் என்ற பெருமைகளை பெற்றவர் பிரியா ராஜன். மேலும் மேயர் பிரியா ராஜன் தற்போது தான் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததால் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.